Skip navigation

வளர்சியின் பங்கீட்டில்
மனிதன் முதன்மையானால்
வீழ்ச்சியின் பங்கீடு விரசமில்லாமல் இருக்கும்.
மனிதமும் மதமும்
தோன்றுதல் அரிதன்று
தோன்றலின் அடிப்படையை
அறிதலே அரிது……..

விதையின் வீரியம்
நிலத்தோடு சேரும்போதுதான்
விருட்சமாகும்.
அனலோடு அளவளாவினால்
அவிந்துதான் போகும்.
சேருமிடத்தின் பெருமை
சேர்க்கையின் விளைவை
ஒத்தே அமையும்……..
மதமும் அப்படித்தான்.

இந்த விதை
மனிதநேயத்தோடு
கூடும்போது
புனிதமாகிறது.
மலிந்ததேகத்தோடு
சேரும்போது
சூனியமாகிறது.

விதைத்தவனின்
கணக்கு
முளைக்கும் வரை
காத்திருக்கும்
முற்றிய்வுடன்
தீர்ந்துபோகும்………..
விதைவிதைத்தவன்
வினையறுகத்தானே வேண்டும்.

மதம் மனிதனால் தோன்றினாலும்
மனிதனை மனிதம் நிறைந்தவனாக
காட்டியது மதம் மட்டுமே!

நெறிகளை நேர்தியாக நிலைநிறுத்தி
அறவழிகளை அன்போடு அழகு படுத்தி
இல்லறத்திற்கும் துறவறத்திற்கும்
இணைகோடாய் இருந்துவந்ததும் அதுவே!

ஆனால் இன்றோ
மதத்தின் பரிணாமம்
நிதம் ஒரு தீர்மானம்.

திருவிழா நாட்களில்
ஆன்மீக ஆத்திகமாகவும்
தேர்தல் களத்தில்
பகுத்தறிவு நாத்திகமாகவும்

மதத்தை பகடைக்காயாய்
பயன்படுத்திக் கொள்கிறோம்.

விழும் எண்ணுக்கே விளம்பரங்கள்
கோடிவரும். தவறும் எண்கள்
திருவோட்டுடன் அடுத்த தேர்தலை நோக்கி……………

மருந்தாக வந்த மதம்
இன்று உணவாகப்பரிமாறப்படுகிறது.
நாளை மனிதத்தை விழுங்கும்
விதமாகவும் ஆகிப்போகலாம்.

பூட்டைத்திறகும் சாவியாக மதம்
இருந்தால் எப்படிப்பட்ட மனக்கதவையும்
திற்ந்துவிடும்
மாறாக் வீட்டை உடைக்கும்
உளியாக ஆகிவிட்டால்
உடைந்துபோவது
இன்று வீடாக இருக்கலாம்
நாளை நாடு என்பதை மறந்துவிடவேண்டாம்…!!

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

உள்ளத்தை உறைய வைப்பது காதல்
என்றால் காதலை உணர வைப்பது
காலம் எனலாமா?

காலத்தின் மாற்றத்தில் காதலும்
மாறுவது காதலின் பரிணாமம்
எனக்கொள்வோம்.

10ல் வரும் காதல் பள்ளிக்காதல்
பக்கத்து பையனின் புத்தகங்கள்
புதுமையாத் தோன்றும்

உணர்வில் மட்டுமே தோன்றி பின்
தொடர்ந்து வரும்.

காலங்கள் கடந்து அசைபோட வைக்கும்
அம்சமான காதல்

காமம் இல்லாத காதல் இது……
காலத்தை வெல்லும்
காதலும் இதுவே……

15ல் வரும் காதல் பருவக் காதல்
பார்த்தது அனைத்தும் பிடித்துப் போகும்.

வாயடித்து சண்டை போட்ட
வயதெல்லாம் வாயடைத்து
வெட்கி நிற்கும்

கண்ணாடிகள் கர்வம் கொள்ளும் ஆம்!
கண் பாராதா என்று காளையர்
காத்துக் கிடக்க கண்டேனே
உன்னை என்று கண்ணாடியை கட்டிக் கிடக்க
கண்ணாடிகளும் கர்வம் கொள்ளும்.

20 ல் வருவது வஞ்சியின் காதல்
வாலிபத்தின் வளைவு, நெளிவுகள்
வட்டமடிக்க..வஞ்சியின் வாளிப்பு
பட்டமடிக்க சின்ன சின்ன
ஆசைகள் சீறி சிறகடிக்க,

நடந்து வந்த நிழல்கள்
நம்மை நிராகரிக்க
தனிமைகள் தனித்தனியாய்
தவித்திருக்க தொடர்ந்தது காதல்
அடுத்த கட்டதிற்கு

35 ல் வரும் காதல் முதிர்ந்த காதல்older+couple
முன்னுரைத்த காதல்
முதுமைக்கு முன்னுரையாய்
கண்ணுறங்கும் நேரத்திலும்
கடமைக்கு கட்டுப்பட்டு
பொன், மணி என்று
பொருளுக்கு ஆசைப்பட்டு
காதலின் சாயலை மட்டும்
சுமந்து சம்ப்ரதாயத்தில்
உழன்றுதனக்கென
யாதும் கொள்ளாமல் தள்ளாடும் நிலையற்றக்
காதல்……….

50ல் வரும் காதல் தாம்பத்யத்தை
தரம் பார்க்கும்
காதல்…
சொந்தங்கள் சோதிக்கும் போதெல்லாம்
முதல் காதல் முதுமைக்கு அசையாய் போகும்.
சங்கீதத்தில் வரும் சந்தங்களாய் ஆகிப்போன
பந்தங்கள்  தத்தம்
பங்கிற்கு சொல்லிவிட்டுப் போடும்.
நிலை நின்று பறிபோகும்.

கொல்லைப்புறக் காற்று
கொடியசைத்து கூப்பிட்டாலும்
தொல்லைதரும் சுற்றம் சுகமாகத் தோன்றும்.

கைப்பிடித்த காதல் காத்திருக்க
காலத்தின் பிடியில் காணாமல் போனது
இந்தக்காதல்………

60 க்கு மேற்பட்ட காதல் ஆனந்தக் காதல்
ஆயுளின் அஸ்தமனக் காதல்…..

வாழ்க்கைப் பாடங்களின் கூட்டல், கழித்தல்களை
கணக்கிட்டு பின் பெருக்கிவிட்ட சந்ததிகளை
சந்தோஷப்படுத்த வகுத்துக்கொண்ட
வழிமுறைக்காதல்.

நிலை ஏழாக இருந்தாலும் நிலைத்து வாழும்
காதல் மட்டும் ஒரே நிலையாய்
இருந்திட அலை அலையாய்
பெருகிவரும் ஆனந்தத்தை ஆராதித்து
ஆர்ப்பரிக்கும் இந்த அறுபதின் நிலையே
ஆனந்தத்தின் எல்லை…………

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

“நினைக்கும்
பொருளில்
எல்லாம் m_cute_girl_01-45
உந்தன்
நினைவுகள் தானடி”

“உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி “

“சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி “

“நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்”

“உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன”

“கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்”

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை….!!!!

திரு.ரவிக்குமார் வரதராஜன்
sad-hispanic-man
வேண்டிய அளவு சிரித்துக்கொள்!
எவள் உன் சிரிப்பை சிறையிட போகிறாளோ!
வேண்டிய அளவு தூங்கிக்கொள் !
எவள் உன் தூக்கத்தை  துளைத்திட
போகிறாளோ!
வேண்டிய அளவு ரசித்துக்கொள்!
எவள் உன் ரசனையை சொந்தம் கொள்ள போகிறாளோ!
வேண்டிய அளவு சிந்தித்து கொள்!
எவள் உன் சிந்தனையை சிதறடிக்க
 போகிறாளோ!
வேண்டிய அளவு  சுற்றிக்கொள் !
எவள் உன் சுகந்திரத்தை சூரையாட போகிறாளோ!
வேண்டிய அளவு வாழ்ந்து கொள்!
எவள் உன் வாழ்க்கையை வாழப்போகிறாளோ!

நன்றி:-  திரு.ரவிக்குமார் வரதராஜன்

boy girl holding hands KA
காலங்கள் மாறிவிடும்
கனவுகள் கலைந்துவிடும்
கருத்துக்கள் கரைந்துவிடும்
நம் நட்பின் நினைவுகள் மட்டும் நிழலாடும்………
இது நமக்குமட்டுமல்ல…….

வகுப்பில் என்க்காக வருகைப்பதிவேட்டில்
நான் வராத நாட்களில் வருகை தந்த நீ………
நீ வராத நாட்களில் உன் வருகைக்காக
என் எண்ணப்பதிவேட்டில் வந்துபோனதே அதிகம்

என்னை உன் தோழியாக்க நீ
எனக்குத் தந்த ஈச்சங்காய்,
பலகையை பளீராக்க கோவையிலை,
புளியங்காய், மற்றும்
மணியிடம் சண்டைபோட்டு வாங்தித்தந்த அந்த
செண்ட்(வாசனை) ரப்பர்கூட எனக்கு உன் நினைவின் பொக்கிஷங்கள்

பள்ளியிலிருந்து வீட்டுக்கும்
வீட்டிலிருந்து பள்ளிக்குமாய்
என்னுடனே இருந்து விட்டுச்சென்ற அந்த அக்கரை………..

தீபாவளியன்று புதுபொலிவுடன் நான்….உனக்காக
எனக்காக நீ
பொன்வண்டை கொட்டாங்கச்சி கூட்டுக்குள்ளடைத்து
ஆசையுடன் நீ என்னிடம் தந்த போது
உன் சட்டையில் தெரிந்த இல்லாமை(வெறுமை)
நம் நட்புக்குள் இல்லாமல் கரைந்துபோனது…………

எனக்காக எல்லாமுமாய் இருந்த நீ
ஊரைவிட்டு வரும்போது மட்டும் உன்னிடம்
ஏதும் சொல்லா மௌனியாய் வந்த நான்
இன்றுவரை எனக்குள் குற்றவாளியாய்
மனச்சிறையில்..!!!

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

love

காதல் என்பது, யாருடனும் யாருக்கும் வரலாம். உலகத்தில் அனைவரிடத்திலும் காட்டம்படவேண்டியது “அன்பு” ஆனால் காதல் என்பது நம் சுயநலத்திற்காக, உன்னை விரும்பும் ஒருவ(ளை)ரையோ, அன்றி நீ மிகவும் விரும்பும் ஒருவ(ளை)ரையோ நேசிப்பது காதல் என்று கொள்வேன்.

காதல் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் வரலாம்; ஒரு ஆணுக்கும் ஒரு ஆணுக்கும் வரலாம், அல்லது ஒரு பெண்ணுக்கும் ஒரு பெண்ணுக்கும் கூட் வரலாம்………..(சரியாக பொருள் கொள்ளுங்கள்0)

காதல் என்பது வேறு, நட்பு என்பது வேறு.

திருமணம் என்பது காதலுக்கு அடுத்த கட்டம் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். திருமணத்தன்று மணமகளைப்பார்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் எத்தனையோபேர்………..நல்ல இல்லறத்தில் இணைந்து வாழ்கின்
றனர்………காதல் திருமணம் செய்துகொண்ட பலர் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர்……இது எதை காட்டுகிறது?

காதல் என்பது திருமணத்திற்கு முன் கட்டம் என்று தவறாக பொருள்கொள்ளவேண்டாம்.

இன்னும் வரும்

காதல் யாருடனும் யாருக்கும் எப்பொழுதும் வரக்கூடும். அது ஒருவருடனும் நின்று போகலாம் அல்லால் தொடரலாம்…மேலும் காதல் என்ற உணர்வின் உச்சத்தில் பிறப்பது தான் “தனக்கெனவே சொந்தம் என்று கொள்ளுதல்”Possessiveness.

காதலில் தோற்றுப்போவது. ஜெயிப்பது என்பதெல்லாம் ஒரு வித பிரமை……..ஒருவர் மேல் காதல் ஏற்பட்டால் இறுதிவரை அது இருக்கும். இருக்க வேண்டும் அது தான் காதல்.
திருமணம் ஆகிவிட்டால் அப்பொழுது அந்தக் காதல் ஜெயித்துவிட்டதெனவும். திருமணத்தில் முடியவில்லையெனில் தோற்றுவிட்டதெனவும் சொல்ல்வது அறியாமை என்று தான் கொள்ளவேண்டும்.
எனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை நான் உண்டியலில் சேர்த்துவைத்த நாணயத்தைப் போன்றதாகக் கொள்வேன். உண்டியலின் கொள்ளளவைப் பொருத்து நாணயங்கள் சேமிக்கப் படும்…….
அதனுடைய பாதிப்பை நாம் நம்க்குள் வைத்திருக்கக் கூடாது…….அதை உணரவேண்டும். அதன் தன்மையை ரசிக்கவேண்டும்…பலனை எதிர் நோக்காமல் நம் அன்பை பகிர்ந்துகொள்ளவேண்டும்.
காதலை வெளியில் சொல்லி சந்தோஷப்படுவது ஒருவகை என்றால், மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அனுபவிப்பது ஒருவகை(கைக்கிளை).
ஒருவேளை நம் காதலை அவர்கள் நிராகரித்துவிட்டால், அத்தோடு அவர்களோடு பேசக்கூடிய சந்தர்பத்தையும் அல்லவா இழந்துவிடுவோம் என்று மறைத்து வைக்கும்
நபர்களும் உண்டு….

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

திருநங்கைகள் அல்ல உன்னின் நற்தங்கைகள்………..
படைப்பின் பரிதாபம் பார்ப்போரின்
பரிகாசம் அடைப்புக்குறிக்குள்
இவர்கள் குறியீடுகள் அடைபட்டு போயின………..

ஒரு பாலில் தோன்றி  இன்னொரு பாலுக்கு
மொழிபெயர்க்கப்பட்ட
இவர்களின் மனப்பாலை உணர மறுக்கும்
இனப்பால்கள் உள்ளவரை நங்கையின்
நளினங்கள் நகல்களாகவே…….

சொல்லுக்கும் செயலுக்கும் தூரங்களை வைத்துக்கொண்டு

உலவும் உலகில் சொல்லாத சொல்லுக்கும்
செய்யாத செயலுக்கும்
தன்னை மாய்த்துக் கொள்ளும்
இவர்கள் சாபத்தின் சொக்கட்டான்கள்………..

இனங்கள் இரண்டு மட்டுமே எனினும்
இடையில் அகப்பட்ட இவர்கள் இரண்டும் கெட்டவர்களாக
காட்சியளித்தாலும் உணர்வில் உயிரின்
உச்சத்தை தொடுபவர்கள்

மாண்டுபோனால் மண்ணுக்கு இறையாகும்
இந்த மாய உடலை மெய்யென நினைத்து
முகமூடிகளை முகவடிவாக பாவித்து உலவும்
மாந்தர்களின் மனதோடு ஒப்பிட வேண்டாம் இவர்களை

உன்னின் உதிரம் இவர்களுக்கும் உண்டு
உன்னின் உணர்வு இவர்களுக்கும் உண்டு
உன்னின் உவகை இவர்களுக்கும் உண்டு
பின் என்னிந்த பிரிவினை?

நாம் கொள்ளும் பாவம் நாமறியோம்
நாம் செய்யும் பாவம் நமதறிவோம்…………
இனி  இவர்கள் திருநங்கைகள் அல்ல
உன்னின் நற்தங்கைகள்………..

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

rain
மேகம் திரண்டு
வானம் மூடி
இடி இடித்து
மின்னலோடு
வந்த மழை
பூமியை
குளிர்வித்து
வானத்தையும்
சுத்தமாக்கும்………..
நிகழ்வு
என்னை
ஈர்க்கவில்லை.

மாறாக,
எதிர்பாரா
நேரத்தில்
அங்கும் இங்குமாக
ஆரம்பிக்கும்
தூரல்
எதிர்பார்ப்பை
அதிகரித்து
வீதியில்
இருக்கும்
நான்
வீட்டுக்கு போய்விடலாம்
என்றுஎண்ணும்முன்னே
என் எண்ணத்தை
மட்டுமல்ல
என்னையும்
முழுவதும்
சுத்தம் செய்யும்
நிகழ்வே……..
என்னை
ஈர்த்துவிடுகிறது.

மழையின்
மாறுதல்கள்
மனதையும்
மாற்றிவிடுகிறது………..

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

விடைகொடுத்தனுப்பMotherandSon

மனமில்லாமல்

விரல்களை

உன்

விரல்களோடு

இருக்கிக்

கொண்டு

தோளில் சாய்ந்த

என்னை

கன்னத்தில் தட்டிவிட்டு

வார்த்தைகள்

இல்லா

மெளனியாய்

உன் கண்ணீரால்

எனக்கு ஆறுதல்

சொன்னாயே

அன்று தான்

அறிந்தேன்

உன் தாய்மையை…………

நன்றி:- திருமதி நிலா இளம்பிறை

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Follow

Get every new post delivered to your Inbox.